university

அண்ணா பல்கலை. இணைப்பு அந்தஸ்து: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!!

Webdesk | Saturday, December 31, 2016 11:13 AM IST

பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 13 -ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறையை முதன்முறையாக ஆன்-லைன் முறைக்கு பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியது:
பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும், அதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து புதுப்பித்தல், புதிதாக விண்ணப்பித்தல் ஆகியவை ஆன்-லைன் நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்க, வரும் 6 -ஆம் தேதி (ஜன.6) கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வர்தா புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, ஜனவரி 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அபராதத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்தி, ஜனவரி 20 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.