tamil

குரூப் 1 தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது..! டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு... 

Webdesk | Saturday, December 3, 2016 12:42 PM IST

குரூப் 1 தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 19-ம் தேதி மூன்று கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்திருந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க,‌ விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 8- ஆம் தேதியே கடைசி நாளாக அறிவித்திருந்தது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட செய்திகுறிப்பில், விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்னரே போதிய கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னையோ எழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் ‌சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.