tamil

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட நேரம் மாற்றம்

Webdesk | Thursday, December 27, 2018 5:09 PM IST

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கான தேர்வு தொடங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிவடையும். இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேரத்தை மாற்றியமைக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி மார்ச் மாதம் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு தேர்வில் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப்பாட தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12. 45 மணிக்கு முடியும்.தமிழ் முதல்தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல்தாள், இரண்டாம் தாள் ஆகிய 4 தேர்வுகள் மட்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு நிறைவடையும்.இந்த நேர மாற்றம் குறித்து மாணவர்களுக்கு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.