tamil

இன்று மாணவர்கள் சேர்க்கைக்காக தொடக்கப்பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

Webdesk | Friday, October 19, 2018 8:15 AM IST

விஜயதசமி விடுமுறை நாளான இன்று பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.