tamil

கஜா புயல் பாதிப்பு - இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு பதிவு: நவம்பர் 19, 2018 07:07     கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்

Webdesk | Monday, November 19, 2018 8:00 AM IST

கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.