tamil

1,920 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் செங்கோட்டையன்

Webdesk | Saturday, September 1, 2018 8:41 AM IST

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் காமராஜர் பிறந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 மாணவ, மாணவியருக்கு ரூ.20 ஆயிரம் வீதமும், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதமும் இந்த ஆண்டு வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார். இவ்விழாவில் ஈரோடு எஸ்பி சக்திகணேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.